• waytochurch.com logo
Song # 27344

எத்தனை இன்பமையா ஏழை எனக்கெத்தனை இன்பமையா


சத்துரு சேனைகளால் உலகுடன்

சாத்தான் செய் தீமைகளில்

பார்த்துப் படித்துத் தினமும் ஜெயம் பெற

பாத்திரமானதுவே
பட்டினி தாகத்தையும்

பலவித கட்டுகள் கவலையும்

சட்டை செய்யாமல் சந்தோஷமடைந்திட

சக்தியுமீந்திடுமே
துன்பம் பெருகிவிட்டால்

அன்பர் முகம் தூரமில்லையெனவே

இன்ப மொழி தரும் இங்கித வேதத்தில்

எல்லாம் அதிசயமே
தீய வழி நடந்து சிறியன

யான் செய்த வினைகளெல்லாம்

நேயமுடன் பொறுத்தாளுகிறாரென்று

கூறும் நல் வேதமதே
ஆரும் சகாயமின்றி அனாதையாய்

தீரும் சமயத்திலும்

ஊரும் உற்றாரும் வெறுக்கும்

வேளையில் உற்ற துணையிதுவே
வீடு விட்டோடுகையில் வேதம்

ஒன்று தேடி எடுத்துக் கொண்டால்

காடுமலையும் நல்வீடு வெளிச்சமும்

ஆகுமென்றோதுமிது
நித்திய வாழ்வு உண்டு, மோட்ச

வீட்டில் நேயர் பலருமுண்டு

தோத்திர கீதங்கள் ஓசை கேட்டானந்தம்

கொள்வோ மென்றோதுமிது

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com