எண்ணிலடங்கா ஸ்தோத்திரம் தேவா என்றென்றும் நான் பாடுவேன்
வானாதி வானங்கள் யாவும்
அதின் கீழுள்ள ஆகாயமும்
பூமியில் காண்கின்ற யாவும்
கர்த்தா உமைப் போற்றுமே -எண்ணி 
 காட்டினில் வாழ்கின்ற யாவும்
கடும் காற்றும் பனிதூறலும்
நாட்டினில் வாழ்கின்ற யாவும்
நாதா உம்மை போற்றமே -எண்ணி 
 நீரினில் வாழ்கின்ற யாவும்
இந் நிலத்தின் ஜீவ ராசியும்
பாரினில் பறக்கின்ற யாவும்
பரனே உம்மைப் போற்றுமே -எண்ணி 
 வால வயதுள்ளோனோரும்
மிகும் வயதால் முதிந்தோர்களும்
பாலகர் தம் வாயினாலே
பாடி உம்மைப் போற்றுவாரே -எண்ணி 

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter