• waytochurch.com logo
Song # 27345

எண்ணிலடங்கா ஸ்தோத்திரம் தேவா என்றென்றும் நான் பாடுவேன்


வானாதி வானங்கள் யாவும்

அதின் கீழுள்ள ஆகாயமும்

பூமியில் காண்கின்ற யாவும்

கர்த்தா உமைப் போற்றுமே -எண்ணி
காட்டினில் வாழ்கின்ற யாவும்

கடும் காற்றும் பனிதூறலும்

நாட்டினில் வாழ்கின்ற யாவும்

நாதா உம்மை போற்றமே -எண்ணி
நீரினில் வாழ்கின்ற யாவும்

இந் நிலத்தின் ஜீவ ராசியும்

பாரினில் பறக்கின்ற யாவும்

பரனே உம்மைப் போற்றுமே -எண்ணி
வால வயதுள்ளோனோரும்

மிகும் வயதால் முதிந்தோர்களும்

பாலகர் தம் வாயினாலே

பாடி உம்மைப் போற்றுவாரே -எண்ணி

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com