• waytochurch.com logo
Song # 27354

உள்ளம் ஆனந்த கீதத்திலே வெள்ளமாகவே பாய்ந்திடுதே


பாவ பாரம் நிறைந்தவனாய்

பல நாட்களாய் நான் அலைந்தேன்

அந்தப் பாரச் சிலுவையிலே

எந்தன் பாரங்கள் சுமந்தவரே - உள்ளம்
மலை போன்றதோர் சோதனையில்

மகிபன் அவர் கைவிடாரே

கல்வாரியின் அன்பினிலே

கனிவோடுன்னை அணைத்திடுவார் - உள்ளம்
உலகம் முடியும் வரைக்கும்

உந்தனோடிருப்பேன் என்றவர்

வாக்கு மாறிடா நேசரையே

நம்பிடுவாய் துணை அவரே - உள்ளம்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com