• waytochurch.com logo
Song # 27374

உன்னைக் காக்கிறவர் உறங்கார் உன் காலைத் தள்ளாட வொட்டார்


மலை போன்ற துன்பம் தினம் வந்தாலும்

ஆழிபோல் சோதனை பெருகினாலும்

கோட்டையும் அரணுமாய் கர்த்தர் இருப்பதால்

நெஞ்சமே நீ கலங்கிடாதே - உன்னை
பாவமும் சாபமும் சூழ்ந்த போது

பாவத்துக்காய் மனம் திருப்பும்போது

பாவத்தை மீண்டும் நினையேன் என்றதால்

நெஞ்சமே நீ கலங்கிடாதே - உன்னை
சிங்கக் குட்டிகள் தாழ்ச்சியடைந்து

பட்டினியாகவும் இருக்கும்

கர்த்தரை தேடுவோர்க்குக் குறைவில்லை என்றதால்

நெஞ்சமே நீ கலங்கிடாரே - உன்னை

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com