• waytochurch.com logo
Song # 27375

உன்னதமானவரின் உயர்மறைவிலிருக்கிறவன் சர்வவல்லவரின் நிழலில் தங்குவான்


தேவன் என் அடைக்கலமே என் கோட்டையும் அரணுமவர்

அவர் சத்தியம் பரிசையும் கேடகமாம்

என் நம்பிக்கையும் அவரே - அவர்
இரவின் பயங்கரத்திற்கும் பகலில் பறக்கும் அன்புக்கும்

இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும்

நான் பயப்படவேமாட்டேன்
ஆயிரம் பதினாயிரம் பேர்கள் உன் பக்கம் விழுந்தாலும்

அது ஒரு காலத்தும் உன்னை அணுகிடாதே

உன் தேவன் உன் தாபரமே
தேவன் உன் அடைக்கலமே - ஒரு பொல்லாப்பும் உன்னைச்

சேருமோ

ஒருவாதையும் உன் கூடாரத்தையே

அணுகாமலே காத்திடுவார்
உன் வழிகளிலெல்hம் - உன்னைத் தூதர்கள் காத்திடுவார்

உன் பாதம் கல்லில் இடறாதபடி

தங்கள் கரங்களில் ஏந்திடுவார்
சிங்கத்தின் மேலும் நடந்து - வலுசர்ப்பத்தையும் மிதிப்பாய்

அவர் நாமத்தை நீ முற்றும் நம்பினதால்

உன்னை விடுவித்துக் காத்திடுவார்
ஆபத்திலும் அவரைநான் - நோக்கிக் கூப்பிடும் வேளையிலும்

என்னைத் தப்புவித்தே முற்றும் இரட்சிப்பாரே

என் ஆத்தும நேசரவர்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com