இயேசுவே வழி சத்தியம் ஜீவன் இயேசுவே ஒளி நித்யம் தேவன்
புதுவாழ்வு எனக்கு தந்தார்
சமாதானம் நிறைவாய் அளித்தார்
பாவங்கள் யாவும் மன்னித்தார்
சாபங்கள் யாவும் தொலைத்தார்
கல்வாரி மீதில் எனக்காய்
தம் உதிரம் சிந்தி மரித்தார்
மூன்றாம் நாளில் உயிர்த்தார்
உன்னதத்தில் அமர்ந்தார் - இயேசுவே 
 நல்மேய்ப்பனாகக் காத்தார்
என்னை தமயனாகக் கொண்டார்
என் நண்பனாக வந்தார்
என் தலைவனாக நின்றார்
மேகங்கள் மீதில் ஓர் நாள்
மணவாளனாக வருவார்
என்னை அணைத்துக் கொள்வார்
வானில் கொண்டுசெல்வார் - இயேசுவே 
 உனக்காகத்தானே பிறந்தார்
உனக்காகத்தானே வளர்ந்தார்
உனக்காகத்தானே மரித்தார்
உனக்காகத்தானே உயிர்த்தார்
இன்றும் என்றும் நமக்காய்
அவர் ராஜனாக இருப்பார்
மார்பில் என்றும் அணைப்பார்
தூக்கி உன்னை சுமப்பார் - இயேசுவே 

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter