• waytochurch.com logo
Song # 27406

இயேசுவே உந்தன் மாசில்லா இரத்தம் எந்தனுக்காக சிந்தினீரே


என் மேல் பாராட்டின உமதன்புக்

கீடாய் என்ன நான் செய்திடுவேன்

நரகாக்கினையின் நின்று மீட்ட

சுத்த கிருபையை நித்தம் பாடுவேன் - மா பாவி
எந்தன் பாவங்கள் பாரச் சுமை போல்

தாங்கக் கூடாத மா பாரமே

மன்னிக்கும் தயை பெருத்த என் தேவா

ஜீவ வார்த்தையால் தேற்றுகின்றீர் - மா பாவி
எந்தன் பாதங்கள் சறுக்கிடும் போது

வலக்கரத்தாலே தாங்குகின்றீர்

மன பாரத்தால் சோர்ந்திடும் போது

ஜீவ வார்த்தையால் தேற்றுகின்றீர் - மா பாவி
எனக்காக நீர் யாவும் முடித்தீர்

உமக்காக நான் என்ன செய்வேன்

எந்தன் ஜீவனுள்ள நாளெல்லாம் உம்

சிலுவை சுமந்து வருவேன் - மா பாவி

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com