• waytochurch.com logo
Song # 27432

இயேசு தான் பதிலும் காரணமும் என்னை நேசித்து காத்திடும் கர்த்தரவர்


வழி தப்பிப் போன பாவி என்னை

கரம் கொண்டழைத்த கர்த்தரவர்

சிலுவையிலே தான் மரிக்க

தம்மை எனக்கு தந்தனரே - இயேசு
கவலையாய் கண்ணீர் சிந்தும் போது

கனிவுடன் தேடி வந்த நாதரல்லோ

கல்வாரியின் அன்பை எண்ணி

களிப்புடனே நான் படிடுவேன் - இயேசு
தூரமாய் போனத் துரோகி என்னை

தூக்கி எடுத்தார் தூய தேவன்

துதித்திடுவேன் பணிந்திடுவேன்

தூக்கிச் செல்வேன் அவர் திருநாமத்தை - இயேசு
வந்திடும் எந்த பாவியையும்

வல்லவர் சேர்ப்பார் தம் மந்தையில்

வந்திடும் இந்நேரமே

வா என்றழைக்கும் மீட்பரண்டை - இயேசு

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com