• waytochurch.com logo
Song # 27476

ஆனந்த பாடல்கள் பாடிடுவேன் ஆர்ப்பரித்து என்றும் மகிழ்ந்திடுவேன்


ஆண்டவர் செய்த அதிசயங்கள்

அற்புதம் அற்புதம் அற்புதம்

குருடர் கண்களைத் திறந்தாரே

செவிடர் கேட்கச் செய்தாரே

என்னையும் இரட்சித்தாரே

என் வாழ்வில் அற்புதமே
பாவச் சேற்றில் வாழ்ந்த என்னை

தூக்கி எடுத்து கழுவினாரே

கரத்தை பிடித்து கொண்டாரே

கரத்தால் தாங்குவேன் என்றாரே

புது சிருஷ்டியாய் மாற்றினாரே

என் வாழ்வில் அற்புதமே
வானாதி வானங்கள் கொள்ளாத

வல்லவர் வாழ்வினில் வந்தாரே

வாசற்படியில் தட்டினாரே

இதயத்தில் வசம் செய்திடவே

என்னுடன் ஜீவிக்கின்றார்

என் வாழ்வில் அற்புதமே.


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com