வார்த்தையாலே உலகைப் படைத்தீரே
Vaarthaiyalae Ulagai Padaithire
Vaarthaiyalae Ulagai Padaithire
வார்த்தையாலே உலகைப் படைத்தீரே
வானம் பூமி அதற்கு சாட்சியே
உந்தனின் வார்த்தைகள்
அதிசயம் அதிசயம் – (2)
உம் வல்ல செயல்கள் ஆச்சரியமே
வார்த்தையாலே உலகைப் படைத்தீரே
வானம் பூமி அதற்கு சாட்சியே
1. மனசு கலங்கி தவிக்கும்போது
உமது வார்த்தை போதும்
இதயம் வலியால் துடிக்கும் போதும்
உமது வார்த்தை போதும்
எமது உள்ளம் மகிழ்ச்சியாய் துள்ளும்
வார்த்தையாலே உலகைப் படைத்தீரே
வானம் பூமி அதற்கு சாட்சியே
2. உலகம் வெறுத்து ஒதுக்கும் போது
உமது வார்த்தை போதும்
உள்ளம் கலங்கி தவிக்கும் போது
உமது வார்த்தை போதும்
எனது ஜீவன் உயிர்ப்பும் நீரே
வார்த்தையாலே உலகைப் படைத்தீரே
வானம் பூமி அதற்கு சாட்சியே