• waytochurch.com logo
Song # 28265

கலங்கிடும் நேரங்களில்

Kalangidum Nerangalil


Kalangidum Nerangalil
கலங்கிடும் நேரங்களில்
உன் கண்ணீரைத் துடைத்திடுவார்
திக்கற்ற பிள்ளையை விசாரிப்பவர்,
உன்னையும் விசாரிப்பாரே


காப்பார் உன்னை காப்பார்
கண்ணின் மணிபோல் உன்னை காப்பார்


1. உலகத்தின் செல்வங்கள் நிலைநிற்குமோ
உன்னதரின் அன்புக்கு ஈடாகுமோ
திரண்ட ஆஸ்தியும், உயர் கல்வியும்
நிலையான சமாதானம் தந்திடுமோ


வருவாயா, இதயம் தருவாயா?
இயேசு உன்னை அழைக்கின்றார்


2. நீ நம்பும் சொந்தம் உன் கூட வருமோ?
நம்பிக்கைக்கு உரியவர் இயேசு தானே
மேலான பதவியும், அதிகாரம் இருப்பினும்
அவையெல்லாம் நிரந்தரமாகிடுமோ?


நம்பி வா, தேடி ஓடி வா,
நிரந்தரம் அவரே, நிம்மதியும் அவரே


3. நிலையான நகரம் இங்கில்லையே
நிரந்தரம் நமக்கு பரலோகமே
நீ காணும் யாவும் நிலையானதல்ல
நித்திய ஜீவனை நாடிடுவாய்


இயேசுவே வழி, சத்தியம்
ஜீவனும் அவரே, சமாதானம் அவரே


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com