கர்த்தரைத் துதியுங்கள் கருத்தாய் பாடுங்கள்
Kartharai Thuthiyungal Karuthai Paadungal
Kartharai Thuthiyungal Karuthai Paadungal
கர்த்தரைத் துதியுங்கள் கருத்தாய் பாடுங்கள் அவர் நாமம் உயர்த்திடுங்கள் கர்த்தரே பெரியவர் அவரே பரிசுத்தர் அவரையே தொழுதிடுங்கள்
சகல கிருபை நிறைந்தவர் வல்லமையுள்ளவர் கைகொட்டி பாடிடுங்கள்
1. துதிகள் நடுவிலே – வாசம் செய்கின்றார் ஒருமித்து துதித்திட – அற்புதம் நிகழுமே
2. எரிகோ வீழ்ந்திடும் – எளிதாய் சுதந்தரிப்போம் ஓசன்னா முழங்குவோம் – துதி பலி செலுத்துவோம்
3. பவுலும் சீலாவும் – தேவனை துதித்தனர். கட்டுகள் கழன்றது – கதவுகள் திறந்தது
4. யோபு துதித்திட – இன்னல் அகன்றது இரட்டிப்பாய் நன்மைகள் – தேவனால் வந்தது