ஆச்சரியமானவரே
ACHARIYAMANAVARE
என் வாழ்விலே நீர் பாராட்டின
தயவுகெல்லாம் நான் பாத்திரன் அல்ல
இதுவரையில் நீர் தாங்கினதற்கு
எவ்வளவும் நான் தகுதியும் இல்ல - 2
மாறாமலே உடனிருந்தீர்
விலகாமலே நடத்தி வந்தீர் - 2
1. எதிர்பார்க்கும் முடிவுகளை
என் வாழ்வில் அளிப்பவரே - 2
வழியறியா அலைந்த என்னை
கண்டீரே உம் கண்களால் - 2
2. சறுக்களிலும் கண்ணீரிலும்
விழுந்திட்ட என் நிலையை - 2
துன்பங்களை கண்ட நாட்களுக்கு
சரியாக என்னை மகிழசெய்தீர் - 2
3. சொந்தமான பிள்ளையாக
தகப்பனை போல் சுமந்தீர் - 2
இமைப்பொழுதும் என்னை விலகினாலும்
இரக்கங்களால் என்னை சேர்த்துக்கொள்வீர் - 2
என் வாழ்விலே நீர் பாராட்டின
தயவுகெல்லாம் நான் பாத்திரன் அல்ல
இதுவரையில் நீர் தாங்கினதற்கு
எவ்வளவும் நான் தகுதியும் இல்ல
மாறாமலே உடனிருந்தீர்
விலகாமலே நடத்தி வந்தீர்
மாறாமலே .......................
விலகாமலே ........................
ஆச்சரியமானவரே....அதிசயமானவரே
