anaathi anbinaale pirithirey அநாதி அன்பினாலே பிரித்தீரே
அநாதி அன்பினாலே பிரித்தீரே
உம் சாயலாய் வாழ்ந்திட
நானல்ல எனக்குள் நீரே வாழ்வதினால்
என் உள்ளம் மகிழுதே
நிலை இல்லா எந்தன் வாழ்வில்
நிலையான உறவானீர்
தள்ளினோர் முன்னிலையில்
ஆயிரங்களை ஆசீர்வதித்தீர்
கருவில் தோன்றின நாள் முதல்
இந்நாள் வரை என்னை மறக்கவில்லை
படைப்பின் காரணர் நீரே
உந்தன் சித்தம் போல் நடத்துகின்றீர்
சிறுமையும் எளிமையுமான
என்னுள் மேலான தரிசனம் துவங்கினீரே
உயிர் வாழும் நாளெல்லாம்
உம் சாயலை பிரதிபலிப்பேன்