kalvaari siluvaiyilae கல்வாரி சிலுவையிலே
கல்வாரி சிலுவையிலே
எனக்காக தொங்கினீரே
இயேசு உம் அன்பினாலே
என் பாவத்தை கழுவினீரே
அன்பே அன்பே என்னையும்
நோக்கி பார்த்த அன்பே
அறிந்ததே நான் மீண்டும் மீண்டும் விழுந்தேன்
தெரிந்தே நான் மீண்டும் மீண்டும் தவறினேன்
இயேசு உம் அன்பினாலே
மீண்டும் என்னை சேர்த்துக்கொண்டீரே
வாழ்க்கையில் தடுமாறினேன்
திக்கற்றவனானேன்
இயேசு உம் அன்பினாலே
என் தோழனாய் வந்தவரே