ummaal uruvaanadhaeஉம்மால் உருவானதே
உம்மால் உருவானதே
மண்ணான சரீரமைய்யா
உமக்காய் நான் வாழ்வதே
என் வாழ்வின் நோக்கமைய்யா
ஆராதித்து மகிழ்ந்து
களிகூர்ந்து வாழ்ந்திடுவேன் x (2)
முன் குறித்து அழைத்தவரே
ஊழியம் செய்திடவே
அழிந்து போகும் ஜனங்களையே
மீட்க்கவே தாகம் தாரும்
ஆராதித்து மகிழ்ந்து
களிகூர்ந்து வாழ்ந்திடுவேன் x (2)
உம்மால் உருவானதே
மண்ணான சரீரமைய்யா
உம்மாலே உருவானதே
ஆத்தும பாரம் அய்யா
ஆத்துமாக்கள் அறுவடையே
என் ஊழிய வாஞ்சையய்யா
ஆராதித்து மகிழ்ந்து
ஊழியம் செய்திடுவேன் x (2)