• waytochurch.com logo
Song # 14847

உம்மை நினைக்கும் போதெல்லாம்

Ummai Ninaikkum Pothellam


Show Original TAMIL Lyrics

Translated from TAMIL to TAMIL

உம்மை நினைக்கும் போதெல்லாம்

நெஞ்சம் மகிழுதையா

நன்றி பெருகுதையா



தள்ளப்பட்ட கல் நான்

எடுத்து நிறுத்தினீரே

உண்மை உள்ளவன் என்று கருதி

ஊழியம் தந்தீரையா



நன்றி நன்றி ராஜா

நன்றி இயேசு ராஜா



பாலை நிலத்தில் கிடந்தேன்

தேடிக் கண்டு பிடித்தீர்

கண்ணின் மணிபோல காத்து வந்தீர்

கழுகு போல் சுமக்கின்றீர்



பேரன்பினாலே என்னை

இழுத்துக் கொண்டீர்

பிரிந்திடாமலே அணைத்துக் கொண்டீர்

உம் பிள்ளையாய் தெரிந்து கொண்டீர்



இரவும் பகலும் கூட

இருந்து நடத்துகின்றீர்

கலங்கும் நேரமெல்லாம் கரம் நீட்டி

கண்ணீர் துடைக்கின்றீர்



உந்தன் துதியைச் சொல்ல

என்னைத் தெரிந்து கொண்டீர்

உதடுகளைத் தினம் திறந்தருளும்

புது ராகம் தந்தருளும்



சிநேகம் பெற்றேன் ஐயா

கனம் பெற்றேன் ஐயா

உந்தன் பார்வைக்கு அருமையானேன்

உம் ஸ்தானாதிபதியானேன்



உலக மகிமையெல்லாம்

உமக்கு ஈடாகுமோ

வானம் பூமியெல்லாம் ஓழிந்து போகும்

உம் வார்த்தையோ ஓழியாதையா


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com