• waytochurch.com logo
Song # 15360

நெஞ்சமே கெத்சேமனேக்கு நீ

Nenjam Gethsemaneku Nee


Show Original TAMIL Lyrics

Translated from TAMIL to TAMIL

நெஞ்சமே கெத்சேமனேக்கு நீ நடந்துவந்திடாயோ

சஞ்சலத்தால் நெஞ்சுருகித் தயங்குகின்றார் ஆண்டவனார்



ஆத்துமத்தில் வாதை மிஞ்சி அங்கலாய்த்து வாடுகின்றார்

தேற்றுவார் இங்காருமின்றித் தியங்குகின்றார் ஆண்டவனார்



தேவ கோபத் தீச்சூளையில் சிந்தை நொந்து வெந்துருகி

ஆவலாய்த் தரையில் வீழ்ந்து அழுது ஜெபம் செய்கின்றாரே



அப்பா பிதாவே இப்பாத்ரம் அகலச்செய்யும் சித்தமானால்

எப்படியும் நின் சித்தம்போல் எனக்காகட்டும் என்கின்றாரே



ரத்த வேர்வையாலே தேகம் மெத்த நனைந்திருக்குதே

குற்றம் ஒன்றும் செய்திடாத கொற்றவர்க்கிவ் வாதை ஏனோ



வானத்திலிருந்தோர் தூதன் வந்தவரைப் பலப்படுத்தத்

தான் சஞ்சலத்தோடு முழந்தாள்நின்று வேண்டுகின்றார்



தாங்கொணா நித்திரைகொண்டு தன் சீஷர்கள் உறங்கிவிழ

ஆங்கவர் தனித்திருந்து அங்கலாய்த்து வாடுகின்றார்


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com