இயேசு மணவாளனே நேசமணர்க்கீயுமே
Yesu Manavalane
Show Original TAMIL Lyrics
Translated from TAMIL to BENGALI
இயேசு மணவாளனே நேசமணர்க்கீயுமே
ஆசிகள் இந்நேரமிதிலே தாசரின் புகலிடமே
காசினியின் மீதிலே வாசம் செய்யும் காலமே
நேசமுடன் வாழ்ந்திடவே
பாரும் இந்த நேரமே வல்லமையின் நாதனே
மாறாத பரம்பொருளே
ஆருயிர் இவர்க்கு நீரே
தாரும் இந்த நேரமே பட்சமுடன் அப்பனே
ஆறாக அருள் பாயவே
கானா எனும் ஊரிலே கலியாண வீட்டிலே
தானங்களைத் தந்தருளியே
விந்தை விளங்கச் செய்தீரே
வானவனே இந்த மணம் மீதினிலே சேர்ந்துமே
ஞானா உம் அருள் தாருமே
இன்பப் பெருக்கிலும் துன்பம் துக்கத்திலும்
ஒன்றாக வாழ்ந்திடவே இன்றே ஆசீர்வதியுமே
அன்பின் பெருக்கமே என்றும் விளங்கவே
அன்பே அருள் புரிவீரே
சத்தியமும் ஜீவனும் உத்தமத்தின் வழியும்
பக்தியுடனே தொடர்ந்து சத்தியம் நிலை நிறுத்த
சுத்த ஜீவியத்தில் நித்தமுமே நடந்து
துத்தியம் பாடிடவே
பலமாய் படர்ந்திடும் உலகில் சுடர்களாய்
வாழ்நாளில் வாழ்ந்திடவே
நாதா அருள் புரியுமே
சகலமும் உமக்கே சதா காலங்களிலும்
ஜெகமதில் தந்து போற்றவே
ஆசிகள் இந்நேரமிதிலே தாசரின் புகலிடமே
காசினியின் மீதிலே வாசம் செய்யும் காலமே
நேசமுடன் வாழ்ந்திடவே
பாரும் இந்த நேரமே வல்லமையின் நாதனே
மாறாத பரம்பொருளே
ஆருயிர் இவர்க்கு நீரே
தாரும் இந்த நேரமே பட்சமுடன் அப்பனே
ஆறாக அருள் பாயவே
கானா எனும் ஊரிலே கலியாண வீட்டிலே
தானங்களைத் தந்தருளியே
விந்தை விளங்கச் செய்தீரே
வானவனே இந்த மணம் மீதினிலே சேர்ந்துமே
ஞானா உம் அருள் தாருமே
இன்பப் பெருக்கிலும் துன்பம் துக்கத்திலும்
ஒன்றாக வாழ்ந்திடவே இன்றே ஆசீர்வதியுமே
அன்பின் பெருக்கமே என்றும் விளங்கவே
அன்பே அருள் புரிவீரே
சத்தியமும் ஜீவனும் உத்தமத்தின் வழியும்
பக்தியுடனே தொடர்ந்து சத்தியம் நிலை நிறுத்த
சுத்த ஜீவியத்தில் நித்தமுமே நடந்து
துத்தியம் பாடிடவே
பலமாய் படர்ந்திடும் உலகில் சுடர்களாய்
வாழ்நாளில் வாழ்ந்திடவே
நாதா அருள் புரியுமே
சகலமும் உமக்கே சதா காலங்களிலும்
ஜெகமதில் தந்து போற்றவே