karmegam kannil theriuthaeகார்மேகம் கண்ணில் தெரியுதே
கார்மேகம் கண்ணில் தெரியுதே
பெருமழையின் இரைச்சல் காதில் கேட்குதே
எழுப்புதல் தேசத்தில் எங்கும் பரவுதே
எழும்பிடுவோம் தேவனின் யுத்த வீரரே
ஜெபித்திடுவோம் செயல்படுவோம்
துதித்திடுவோம் தேசத்தை சொந்தமாக்குவோம்
1) ஆதி சபை அற்புதங்கள் அதிகம் நடக்குமே
ஆதி அன்பு விசுவாசம் நம்மில் பெருகுமே
2) அறுவடை களத்திலே அறுப்பு அதிகமே
அறுவடைக்கு ஆட்களோ தேவை மிகுதியே
3) பாகாலின் பீடங்கள் தகர்ந்து போகுமே
கர்த்தரே தெய்வமென்ற சத்தம் கேட்குமே
4) இந்தியரின் வாய்கள் தினம் வசனம் பேசுமே
இந்தியாவின் எழுப்புதலை உலகம் பேசுமே