aanantha padalgal padiduven ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன்
ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன்
ஆர்ப்பரித்து என்றும் மகிழ்ந்திடுவேன்
அல்லேலூயா என்று பாடிடுவேன்
ஆண்டவர் செய்த அதிசயங்கள்
அற்புதம் அற்புதம் அற்புதமே
குருடர் கண்களைத் திறந்தாரே
செவிடர் கேட்க செய்தாரே
என்னையும் இரட்சித்தாரே
என் வாழ்வில் அற்புதமே
பாவச் சேற்றில் வாழ்ந்த என்னை
தூக்கி எடுத்து கழுவினாரே
கரத்தை பிடித்து கொண்டாரே
கரத்தால் தாங்குவேன் என்றாரே
புது சிருஷ்டியாய் மாற்றினாரே
என் வாழ்வில் அற்புதமே
வானாதி வானங்கள் கொள்ளாத
வல்லவர் வாழ்வினில் வந்தாரே
வாசற்படியில் தட்டினாரே
இதயத்தில் வாசம் செய்திடவே
என்னுடன் ஜீவிக்கின்றார்
என் வாழ்வில் அற்புதமே