aarathanai intha velai ஆராதனை இந்த வேளை
ஆராதனை இந்த வேளை
ஆண்டவரை தொழும் காலை
துதியுடனே ஸ்தோத்திரிப்போம்
தூயவரை தொழுதிடுவோம்
ஆவியுடன் நல் உண்மையுடன்
ஆராதிப்போம் அவர் நாமத்தையே
கூடிடுவோம் பணிந்திடுவோம்
கல்வாரி அன்பினை பாடிடுவோம்
திரு இரத்தத்தால் மீட்பர் சம்பாதித்த
திருச்சபையில் தினம் கூடிடவே
தவறாமல் வேதம் ருசி பார்த்திட
திருப்பாதம் சேர்ந்து ஜெபித்திடுவோம்
மெய் சமாதானம் கிருபையுடன்
மாறாத மீட்பர் மகிமையுடன்
மாசற்ற பேரின்ப அன்பினிலே
மறுரூபம் அடைந்தே பறந்திடுவோம்