aaviyanavar namakkulle ஆவியானவர் நமக்குள்ளே வாசம் செய்வதற்கு
ஆவியானவர் நமக்குள்ளே வாசம் செய்வதற்கு
அந்நிய பாஷை மட்டும் தான் அடையாளமா
அன்பு வேண்டாமா பரிசுத்தம் வேண்டாமா
உண்மை வேண்டாமா தேவ பயம் வேண்டாமா
திருச்சபையே மணவாட்டியே
இயேசு வருகிறார் நீ ஆயத்தமா
பாவம் செய்யாமல் விலகி ஓடுவதுதான்
ஆவியானவரின் தூய்மையான கிரியை
குறைகூறி திரியாமல் தன் பிழைகளை உணர்ந்திடவே
உணர்த்தி விடுவது தான் ஆவியானவரின் கிரியை
துரோகம் செய்தவரை மன்னித்திட நம்மை
தூண்டிவிடுவதுதான் ஆவியானவரின் கிரியை
சாட்சியார் வாழ்ந்திட இயேசுவை அறிந்திட
உந்தித்தள்ளுவது தான் ஆவியானவரின் கிரியை