aaviyanavare analay irangidume ஆவியானவரே அனலாய் இறங்கிடுமே
ஆவியானவரே அனலாய் இறங்கிடுமே
எல்லா ஆவியின் வரங்களோடு
பலமாய் இங்கு இறங்கும் இன்று
வானங்கள் இன்று திறக்கட்டுமே
அபிஷேக மழையை பெய்யட்டுமே
உன்னத ஆவியை ஊற்றிடுமே
மறுரூபமாய் என்னை மாற்றிடுமே
பெந்தெகொஸ்தே நாளின் அனுபவங்கள்
அப்படியே இன்று நடக்கட்டுமே
பலத்த காற்றின் முழுக்கம் போல் ஒரு
வல்லமை இங்கு வீசட்டுமே
அக்கினி மயமான நாவுகள்
எங்கள் மேல் வந்து அமரட்டுமே
ஆவியின் வரங்கள் யாவையுமே
வெளிப்படுத்தணுமே செயல்படுத்தணுமே
கண்ணீர் கவலைகள் மறையணுமே
கட்டுகள் யாவையும் உடையணுமே
அற்புதம் அதிசயம் நடக்கணுமே நீர்
யார் என்று ஜனம் அறியணுமே
பெலத்தின் ஆவியால் நிரம்பணுமே
சாட்சியாய் எங்கும் வாழணுமே
எங்கள் சித்தம் மறையணுமே
தேவ சித்தம் நீறைவேறணுமே