aaviyodum unmaiyodum ஆவியோடும் உண்மையோடும்
ஆவியோடும் உண்மையோடும்
ஆண்டவரை தொழுதிடுவோம்
பரிசுத்த அலங்காரத்துடனே நாமும்
பரிசுத்தரை தொழுவோமே
நடுக்கத்தோடும் பயபக்தியோடும்
கர்த்தரில் களிகூருவோம்
பணிந்து குனிந்து தலைகள் தாழ்த்தி
பாதம் பணிந்திடுவோம்
அவர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
பரிசுத்தரிடம் பாவமில்லையே- அவர்
பரிசுத்தம் எல்லையில்லையே
ஆர்வத்தோடும் ஆனந்தத்தோடும்
சந்நிதி வாருங்களே
கர்த்தரே தேவன் மகாராஜன்
என்று சொல்லுங்களே
அவர் வாசலிலே துதியோடும் புகழ்சியோடும்
வந்து கீர்த்தனம் பண்ணுங்களே
துதிபலிகளை செலுத்துங்களே
உதட்டிலல்ல உள்ளத்திலிருந்து
ஸ்தோத்திர பலியிடுவோம்
ஒன்று கூடி ஒரு மனமாய்
பாடி புகழ்ந்திடுவோம்
அவரே தேவன் நாம் அவர் ஆடுகளே
அவர் சத்தியம் மேய்ந்திடுவோம்
அதில் என்றென்றும் நிலைத்திருப்போம்