anbin uruvam aandavar அன்பின் உருவம் ஆண்டவர்
அன்பின் உருவம் ஆண்டவர்
அழைக்கிறார் நீ அருகில் வா
தொய்ந்து போன உன் வாழ்வினை
கேட்கிறார் நீ அருகில் வா
ஓடிவா நீ ஓடிவா கண்கலங்கியே நீ வா
தூரமாய் நிற்கும் உன்னைத் தான்
அழைக்கிறார் நீ அருகில் வா
மனிதர் பலரை நன்பினாய்
பலமுறை தடுமாறினாய்
உற்றார் பெற்றார் அன்பெல்லாம்
கனவு போன்று அகலுமே
நண்பர் பலரும் இருப்பினும்
நாடும் அன்பை பெற்றாயோ
செல்வம் எல்லாம் மாயையே
உலகம் கானல் நீராமே
ஒரு முறை அன்பை ருசித்து
விழுந்து போன நீ எழும்பி வா
பலமுறை துரோகம் செய்ததால்
இயேசுவின் கண்ணீரை துடைக்க வா
இன்னும் நொந்து போகாமல்
இன்றே அருகில் ஓடிவா
உள்ளம் கூறும் உன்னையே
தள்ளேன் என்றார் ஓடிவா