arasanai kanamalirupomo அரசனைக் காணாமலிருப்போமோ நமது
அரசனைக் காணாமலிருப்போமோ நமது
ஆயுளை வீணாகக் கழிப்போமோ
பரம்பரை ஞானத்தைப் பழிப்போமோ யூதர்
பாடனு பவங்களை ஒழிப்போமோ யூத
யாக்கோபிலோர் வெள்ளி உதிக்குமென்றே இஸ்ரேல்
ராஜ செங்கோலெங்கும் கதிக்குமென்றே
ஆக்கமிழந்து மறுவாக்குரைத்த பாலாம்
தீர்க்கன் மொழிபொய்யாத பாக்கியமே யூத
தேசோ மயத்தாரகை தோன்றுது பார் மேற்குத்
திசை வழி காட்டிமுன் செல்லுது பார்
பூசனைக் காண நன்கொடைகள் கொண்டே அவர்
பொன்னடி வணங்குவோம் நடவுமின்றே யூத
அலங்காரமனை யன்று தோணுது பார் அதன்
அழகு மனமுங் கண்ணும் கவர்ந்தது பார்
இளவர சங்கிருக்கும் நிச்சயம் பார் நாம்
எடுத்த கருமம் சித்தியாகிடும் பார் யூத
அரமனையில் அவரைக் காணோமே அதை
அகன்று தென்மார்க்கமாய்த் திரும்புவமே
மறைந்த உடு அதோ பார் திரும்பினதே பெத்லேம்
வாசலில் நமைக்கொண்டு சேர்க்குது பார் யூத
பொன் தூபவர்க்கம் வெள்ளைப் போளமிட்டே ராயர்
பொற்கழல் அர்ச்சனை புரிவோமே
வன்கண்னன் ஏரோதைப் பாராமல் தேவ
வாக்கினால் திரும்பினோம் சோராமல் யூத