ariyanayil raajavaaga அரியணையில் ராஜாவாக வாழ்பவரே யெஷீவா
அரியணையில் ராஜாவாக வாழ்பவரே யெஷீவா
உலகை ஆளும் ராஜாவாக வாழ்பவரே யெஷீவா
உம்மைப் போல் தெய்வம்
இந்த உலகில் இல்லையே யெஷீவா
ராஜாதி ராஜா மகா ராஜா எங்கள் யெஷீவா
யெஷீவா யெஷீவா உயிர்த்தெழுந்த யெஷீவா
உம்மை போல் தெய்வம்
இந்த உலகில் இல்லையே யெஷீவா
இரண்டாம் ஆதாமாக சாத்தானுக்கு சவாலாக
சத்துருவை ஜெயிக்க வந்த யூத ராஜ சிங்கமாக
சிலுவையில் சாத்தானை நீர் மொத்தமாக அழித்துவிட்டீர்
துரைத்தனம் அதிகாரங்கள் அனைத்தையும் உரிந்து போட்டீர்
உயரே வானத்திலும் கீழே இந்த பூமியிலும்
மேலான ஒரே நாமம் யெஷீவாவின் ஒரே நாமம்
யெசுவா பெயரை சொன்னாலும் பேய்கள் எல்லாம் நடுங்குதையா
தீராத வியாதி எல்லாம் நொடி பொழுதில் மறையுதையா
மலைகள் செம்மறி போல் துள்ளி பாய்ந்து துதிக்குதாமே
நாங்களும் பாடுகிறோம் சந்தோஷமாய் ஆடுகிறோம்
பூமி மாத்திரமா யெஷீவாவை போற்றிடுது
சுற்றும் கோள் எல்லாம் அப்பாவை தான் பாடிடுது