aruppomiguthi aatkal thevai அறுப்போ மிகுதி ஆட்கள் தேவை
அறுப்போ மிகுதி ஆட்கள் தேவை
அருளும் நாதனேதிவ்ய அருமைப் போதகனே
இந்திய தேசம் எங்கும் இருள்
எட்டி ஓடவே எங்கள் சபைகள் நீடவே
எமைப்புரந்த யேசுநாமம்
எவருங்காணவே இருள் அடங்கி நாணவே
வசன அமுதை வார்க்கும் நல்ல
வலவர் ஓங்கவே மதிகேடு நீங்கவே
நாடு நகரம் காடுமேடு
நாடுமிடமெல்லாம் சபைபரவு மிடமெல்லாம்
போதகன்மார் ஆவியோடுன்
புகழைஓதவே மிகுப்பொய்யை மோதவே
எண்ணிலாத ஆத்துமாக்கள்
ஏங்கிநையுதே மிகவும் இளைத்துத் தொய்யுதே
ஏழையடியார் மனுக்கிரங்கும்
எமையாட்கொண்டவா நல்லவாக்கு விண்டவா