arudkaram thaedi un aalaya peedam அருட்கரம் தேடி உன் ஆலயப்பீடம்
அருட்கரம் தேடி உன் ஆலயப்பீடம்
அலையலையாக வருகின்றோம்
அருவியாய் வழியும் உன் அருளினில் நனைய
ஆனந்தமாக வருகின்றோம் – 2
ஆயிரம் ஆயிரம் ஆசைகளால்
ஆடிடும் ஓடமாய் எம் வாழ்க்கை – 2
மூழ்கிடும் வேளையில் எம் இறைவா உன்
கரம் தானே எம்மைக் கரை சேர்க்கும்
பெரும் புயலோ எழும் அலையோ நிதம் வருமோ ஒளியிருக்க – 2
நாளுமே எம்மைக் காத்திடும் உந்தன்
ஆறுதல் வேண்டும் எம் இதயங்களோ
அன்பினைத் தேடி அலைகின்றதே – 2
தேற்றிட விரையும் எம் தலைவா – உம்
தெய்வீகக் கரம் தானே எமைத் தேற்றும்
கொடும் பிணியோ வரும் பரிவோ
துயர் வருமோ துணையிருக்க – 2
நாளுமே அன்பால் ஆறுதல் வழங்கும்