azhaiththeerae iyaesuvae பாக்கியமான பணி திருப்பணி
பாக்கியமான பணி திருப்பணி
அழைத்தீரே இயேசுவே
அன்போடென்னை அழைத்தீரே
ஆண்டவர் சேவையிலே மரிப்பேனே
ஆயத்தமானேன் தேவே
1.என் ஜனம் பாவத்தில் மாள்கிறதே
என் உயிர்த்தந்தேன் மன்னுயிர்க்கே
என் துயர தொனியோ இதை யார் இன்று கேட்பாரோ
என் காரியமாக யாரை அழைப்பேன்
என்றீரே வந்தேனிதோ
2.என்னதான் தீங்கு நான் இழைத்தேன்
என்னை விட்டோடும் என் ஜனம்
எத்தனை நன்மைகளோ உனக்காக நான் செய்தேனல்லோ
என்றே உரைத்தென்னை ஏங்கி அழைத்தீர்
எப்படி நான் மறப்பேன்?
3.ஆதி விஸ்வாசம் தங்கிடவே
ஆண்டவர் அன்பு பொங்கிடவே
ஆதி அப்போஸ்தலரே உபதேசம் அளித்தனரே
நல் ப10ரண தியாகப் பாதை நடந்தே
நன்றியுடன் உழைப்பேன்
4.எந்தன் ஜெபத்தைக் கேட்டிடுமே
ஏழை ஜனத்தை மீட்டிடுமே
எந்தன் பிதா சித்தமே என் போஜனமும் அதுவே
என் பிராணனைக்கூட நேசித்திடாமல்
என்னையும் ஒப்படைத்தேன்
5.ஆடம்பரங்கள் மேட்டிமைகள்
ஆசாபாசங்கள் பெருகிடுதே
ஆயிரம் ஆயிரமே நகர வழி போகின்றாரே
ஆ! நீரேயல்லாமல் யாருண்டு மீட்க
ஆண்டவரே இரங்கும்
6.பாக்கியமான சேவையிதே
பாதம் பணிந்தே செய்திடுவேன்
ஆயுள் முடியும் வரை கிறிஸ்தேசு வருகை வரை
அன்பின் மனத்தாழ்மை உண்மையும் காத்து
ஆண்டவரை அடைவேன்