en idhayam sollum என் இதயம் சொல்லும்
என் இதயம் சொல்லும்
என் உதடும் பாடும்
நீர் மட்டும் உண்மை அன்பு என்று
உண்மையில்லா உலகினில் உயிர் தவித்தேனே
உறவென்று நினைத்தோரும் உதறிப் போனார்
ஆனாலும் வாழ்வில் திரும்ப வரச் செய்தீர்
வாக்குத்தத்தம் தந்தென்னை திடப்படுத்தினீர்
கொடுமையாய் பேசும் சிலர் குரலைக் கேட்டேன்
நம்பிக்கை இல்லாமல் நினைவில் துடித்தேன்
நினைவில் வரும் பாரம் தெரிந்தவர் நீரே
என் சுமை சுமந்து கொண்டு உதவினீரே
இனி வாழ்க்கை இல்லை எல்லாம் முடிந்ததென்று
வாழ்வதா சாவா என்று நினைத்த போதும்
எல்லா இடங்களிலும் எல்லா நிமிடமும்
என் கூடவே இருந்து தேற்றினீரே