elunthaar iraivan எழுந்தார் இறைவன் – ஜெயமே ஜெயமெனவே
எழுந்தார் இறைவன் – ஜெயமே ஜெயமெனவே
எழுந்தார் இறைவன்
1. சாவின் பயங்கரத்தை ஒழிக்கக் – கெட்ட
ஆவியின் வல்லமையை அழிக்க – இப்
பூவின்மீது சபை செழிக்க — எழுந்தார்
2. செத்தவர் மீண்டுமே பிழைக்க – உயர்
நித்திய ஜீவனை அளிக்கத் – தேவ
பக்தர் யாவரும் களிக்க — எழுந்தார்
3. விழுந்தவரைக் கரையேற்றப் – பாவத்
தெழுந்து மனுக்குலத்தை மாற்ற – விண்ணுக்
கெழுந்து நாம் அவரையே போற்ற — எழுந்தார்
4. கருதிய காரியம் வாய்க்கத் – தேவ
சுருதி மொழிகளெல்லாம் காக்க – நம்
இரு திறத்தாரையும் சேர்க்க — எழுந்தார்