enkal thuthiththalin jeya kempeeramae புகழ்பாடுவோம் கொண்டாடுவோம்
புகழ்பாடுவோம்! கொண்டாடுவோம்!
எங்கள் துதித்தலின் ஜெய கெம்பீரமே
எந்நாளும் கோடி ஸ்தோத்திரம்!
ஆவியோடான்மா தேகம்
ஆண்டவர் உம் புகழ் பாடும் – 2
கொண்டாடும் கோடி ஸ்தோத்திரம்
1. தேவனைத் துதிப்பதொன்றே எங்கள் முழு முதல் ஊழியமே
ஆவியின் நிறைவுடனே என்றும் தேவனைத் தொழுதிடுவோம்!
நிகரே இல்லாதவர்! நீர் நித்தியமானவர்!
மகிமை நிறைந்தவர்! நீர் மகத்துவம் அணிந்தவர்!
2. தொழுபவர் நடுவினிலே தினம் ஜோதியாய் வெளிப்படுவார்
ஊழியர் மத்தியிலே உயிர்த் தோழனாய் உடன் வருவார்
கிருபை உள்ளவர்! நீர் துதியில் மகிழ்பவர்!
கிரியை செய்பவர்! நீர் மகிமை அளிப்பவர்!
3. தேவனுக்கு நிகராய் முழு அகிலத்தில் எவருமில்லை
ஆண்டுகள் முடிந்துபோனாலும் அவர் ஆளுகை முடிவதில்லை
ஆவியைப் பொழிபவர்! நீர் ஆறுதல் அளிப்பவர்!
ஏந்தி சுமப்பவர்! நீர் மகிமையில் சேர்ப்பவர்!