ennidam ezhuntha yesuvae umakku என்னிடம் எழுந்த இயேசுவே உமக்கு
என்னிடம் எழுந்த இயேசுவே உமக்கு
அன்பு ஆராதனை நன்றியுமென்றும் – 2
பரலோக வாசிகள் அருமையாய் உம்மை
புகழ்ந்து கொண்டாடிட புவியிலே இந்த – 2
நீசனாம் என்னிடம் எழுந்ததும் ஏனோ
நேசமுன் அதிசய இரக்கமுமல்லோ
மாசில்லா அப்பக் குணங்களில் மறைந்து
நேசமாய் என்னுள் எழுந்து வந்தீரென – 2
ஆசையாய் இயேசுவே விசுவசித்துமக்கு
பூசிதமாய் நன்றி செலுத்துகின்றேனே
சிந்தனை சொல்லிலும் செயலிலும் உந்தன்
சீரிய திருவுள்ளம் பிறழாது வளர – 2
இயேசுவே உந்தன் அரசெங்கும் விளங்க
நேசமாய் அருள வேண்டுகின்றோமே