eththanai nanmaigal enakku எத்தனை நன்மை எனக்குச் செய்தீர் நல்லவரே
எத்தனை நன்மை எனக்குச் செய்தீர் நல்லவரே
எப்படிப்பா உமக்கு நான் நன்றி சொல்வேன்
நன்றி நன்றி கோடி நன்றி
தடுமாறிப்போன நிலையில் தாங்கினீரைய்யா
ஒரு தகப்பனைப் போல் பரிவு காட்டி தூக்கினீரய்யா
ஆதி அன்பு எனக்குள்ளே குறைந்து போனதே
ஆனாலும் எண்ணாது நன்மை செய்தீரே
மங்கி மங்கி எரிந்தபோதும் அணைக்காதிருந்தீர்
நெரிந்து போன நாணல் வாழ்வை முறிக்காதிருந்தீர்
உம் சத்தம் கேட்டு சித்தம் செய்ய மறந்தேனைய்யா
ஆனாலும் சகித்துக் கொண்டு நடத்தினீரைய்யா
வலதுபக்கம் இடதுபக்கம் சாயும்போதெல்லாம்
உம் வார்த்தையாலே வழுவாமல் காத்துக் கொண்டீரே
உயிரோடு இருக்கும்வரை உம்மைப் பாடுவேன்
உம் அதிசயங்களை எடுத்துச் சொல்லுவேன்