iyaesu iraajanin thiruvatikku பார்போற்றும் தூயா சரணம்
பார்போற்றும் தூயா சரணம்
இயேசு இராஜனின் திருவடிக்கு சரணம் சரணம் சரணம்!
ஆத்ம நாதரின் மலரடிக்கு சரணம் சரணம் சரணம்!
1. பார்போற்றும் தூய தூய தேவனே
மெய்ராஜாவே எங்கள் நாதனே
பயம் நீக்கும் துணையாவும் ஆனீரே
சரணம்! சரணம்! சரணம்!
2. இளைப்பாறுதல் தரும் வேந்தனே
இன்னல் துன்பம் நீக்கும் அருள் நாதரே
ஏழை என்னை ஆற்றி தேற்றிக் காப்பீரே
சரணம்! சரணம்! சரணம்!
3. பெலவீனம் யாவும் போக்கும் வல்லோரே
பெலனீந்து வலக்கரம் பிடிப்பீரே
ஆவி ஆத்மா சரீரத்தைப் படைக்கின்றேன்
சரணம்! சரணம்! சரணம்!