kallum allave kayam கல்லும் அல்லவே காயம் – வல்லும் அல்லவே – இது
கல்லும் அல்லவே காயம் – வல்லும் அல்லவே – இது
வெள்ளி பொன் விலைமதியா மேரும் அல்லவே
வல்லமை பேசாதே நாளை வருவதறியாய் – அதால்
நல்ல வழி தேடி தேவ நாமத்தைத் தியானி
சூரியன் கீழ்க் கண்டதெல்லாம் மாயை அல்லவோ – சாலமோன்
பார் அறியச் சொன்னதை நீ பார்த்தறியாயோ
காற்றடித்த மேகம் புகைக்கொப்பதாகவே – இங்கே
போற்றிய மனுடர் ஜீவன் போய் ஒழியுமே
வேகமாய் வடியும் ஆற்றுக் கொப்பதாகவே – மாய
தேக நரர் நாட்களும் சீக்கிரம் கழியுமே
இராப்பகல் இருள் வெளிச்சம் மாறும் வண்ணமே – ஐயோ
நராட்களின் மகிழ்ச்சிக்கு மா மாறுதல் உண்டே
பூவதும் உதிரும் பசும்புல்லும் வதங்கும் – அது
போலவே நரர் உருவம் மாறிவதங்கும்
மேலது கீழ் கீழதுமேல் ஆம் உருளைபோல் – நரர்
மேன்மையும் வாழ்வும் கீழது மேலும் ஆகுமே
நுண்ணிமை ஞானி என்றாலும் கீர்த்திபெற்றாலும் – ஐயோ
அன்னவன் மலையும் நேரம் யாவும் கலையும்
ஆசனம் துரைத்தனம் தத்துவங்கள் ஒழியும் – அர
சாண்ட மன்னாரும் ஒரு நாள் மாண்டொழிவாரே
யாவும் ஓட்டமாகப் பாயும் யாவும் அழியும் – மெய்த்
தேவபக்தி யே கெலிக்கும் ஜீவன் நிலைக்கும்