kanikkai thara naan varugintren காணிக்கை தர நான் வருகின்றேன்
காணிக்கை தர நான் வருகின்றேன்
உன் கரங்களில் என்னைத் தருகின்றேன்
காணிக்கை தர நான் வருகின்றேன் (2)
என்னக் கொடுத்தாலும் பயனில்லை நான்
என்னைக் கொடுக்காமல் பொருள் கொடுத்தால் (2)
என்னையே தான் நீ கேட்கின்றாய் – நான்
என்னையே முழுவதும் தருகின்றேன் (2)
சிந்தனை சொல் செயல் திறன் அனைத்தும் – மனம்
உள்ளெழும் ஆசைகள் ஒவ்வொன்றும் (2)
ஒரு துளி நீராய்க் கலக்கின்றேன் – அதை
பயனுள்ள பலியாய் மாற்றிடுவாய் (2)