kavalaipadade magane கவலைப்படாதே மகனே கவலைப்படாதே
கவலைப்படாதே மகனே கவலைப்படாதே
கவலைப்படாதே மகளே கவலைப்படாதே
உன்னை என்றும் விசாரிக்கும் பரமபிதா
உன் அருகே இருக்கிறார் கலங்காதே
உன்னையும் நேசிக்கும் தகப்பனவர்
உன் குறை எல்லாம் நீக்கீடுவார்
காக்கைகளை போஷிக்கும் தேவனவர்
அனுதினமும் நடத்துவார் கலங்காதே
பூக்களை உடுத்திடும் ராஜனவர்
கண்மணி போல் உன்னை காத்திடுவார்
துயரமெல்லாம் புரிந்திடும் தெய்வமவர்
உன் பாரம் சிலுவையில் சுமந்தாரே
கவலைகள் அவரிடம் சொல்லி விடு
கண்ணீர்கள் யாவையும் துடைத்திடுவார்