manam makizha iyaesuvae naatu மனம் மகிழ இயேசுவே நாடு
மனம் மகிழ இயேசுவே நாடு
மாந்தரின் துன்பங்கள் தீர்ப்பவரே
குணமாக்கும் தழும்புகள் கண்டிடுவாய்
குருசின் காட்சியை அண்டிடுவாய்
தடுமாறும் உள்ளங்கள் திகழ்ந்திடவே
தற்பரன் பாடுகள் ஏற்றனரே
நெருக்கப்பட்டார் நமக்காய் ஒடுக்கப்பட்டார்
வாய் திறவாமல் அன்று பொறுத்து நின்றார்
இடுக்கண்களiல் உன்னைக் காத்திடவே
இயேசுவே சிலுவையில் அறையப்பட்டார்
துன்மார்க்கரோடு தாழ்த்தப்பட்டார்
ஐஸ்வரியமுள்ளோராய் உயர்த்தப்பட்டார்
கொடுமை செய்யாதவர் கைவிடாரே
கர்த்தரின் அன்பை ருசிப்பாயோ