manithan yaarenru மனிதனை அலட்சியம் செய்யாதே
மனிதனை அலட்சியம் செய்யாதே
மனிதன் யாரென்று உலகில் யாருக்கும் தெரியாது
அவன் உருவம் கண்டு இவன் தான் என்று
சொல்லிவிடாதே அவனைத் தள்ளிவிடாதே (2)
1. மனிதனைப் படைத்த கடவுள் அவனை
மண்ணென்று சொன்னாரே – அவன்
மண்ணென்று கண்டும் தேடியே வந்து ஜீவனைத் தந்தாரே
உறவும் அன்பும் உள்ளவன் மனிதன் என்பதை மறவாதே
அவன் பழக்கம் கண்டு இவன் தான் என்று
முடிவு செய்யாதே அவனை இழந்துவிடாதே
2. உலகினில் பிறந்த மனிதர் அனைவரும்
தனித்தனி மனிதர்களே .. இந்த
மனிதர்கள் கூட்டத்தைத் தேடியே செல்வோர் தேவனின் பிரியர்களே
பரந்த இத்தேசம் இயேசுவைக் கண்டால் எத்தனை நன்மை பெறும்
விரைந்தே உழைப்போம் அழுதே ஜெபிப்போம்
தொழுவோம் அவர் பாதம் இந்த தேசத்திற்கே சேஷமம்