mathumalar niraikodi kaiyilanthum மதுமலர் நிறைகொடி கையிலேந்தும்
மதுமலர் நிறைகொடி கையிலேந்தும்
மாட்சிமை நிறைசூசை மாமுனியே
துதிவளர் உமது நற்பதம் வந்தோம்
துணை செய்து எமையாளும் தாதையரே
வானுலகிழந்ததால் கர்வமுற்ற
வன்மனக் கூளியின் வலையறுக்க
தான் மனுவாய் உதித்த கடவுள்
தாதையாம் சூசை உன் தஞ்சம் வந்தோம்
ஒளிநிறை கதிரோனை ஆடை எனும்
உடுவதைத் தலையிலும் முடிபுனைந்த
துளிநிகர் அருள்பொழி மாமரியாள்
துணைவனாம் சூசை உன் துணைபுரிவாய்
தூதர் வானோர்க்கு மேலாய் உயர்ந்து
துலங்கும் சிம்மாசனந் தனிலிருந்து
ஆதிரையோரைக் கண் பார்த்துனது
ஆசியை அளித்தருள் மாதவனே