paatith thuthi manamae பாடித் துதி மனமே பரனைக் கொண்டாடித்
பாடித் துதி மனமே; பரனைக் கொண்டாடித்
துதி தினமே.
நீடித்த காலமதாகப் பரன் எமை
நேசித்த பட்சத்தை வாசித்து வாசித்துப் — பாடி
1. தீர்க்கதரிசிகளைக் கொண்டு முன்னுறச்
செப்பின தேவபரன் இந்த காலத்தில்
மார்க்கமதாகக் குமாரனைக் கொண்டு
விளக்கின அன்பை விழைந்து தியானித்துப் — பாடி
2. சொந்த ஜனமாக யூதர் இருந்திட
தொலையில் கிடந்த புறமாந்தரம் எமை
மந்தையில் சேர்த்து பராபரன் தம்முடை
மைந்தர்களாக்கின சந்தோஷத்துக்காகப் — பாடி
3. எத்தனை தீர்க்கர், அநேக அப்போஸ்தலர்,
எத்தனை போதகர்கள், இரத்தச் சாட்சிகள்,
எத்தனை வேண்டுமோ அத்தனையும் தந்திங்-கு
இத்தனையாய்க் கிருபை வைத்த நம் கர்த்தனைப் — பாடி