poerruvoemae poerruvoemae போற்றிப்பாடுங்கள்
போற்றிப்பாடுங்கள்
போற்றுவோமே போற்றுவோமே
எம் தேவரீரை இவ்வேளையிலே – நன்றியுடனே
1. துங்கவன் இயேசுவே தூயா உமக்கே துதிகள் சாற்றிடுவேன்
மங்கா புகழும் மகிழ்ந்துபோற்றி எங்கும் துதித்திடுவேன்
கங்குல் அற எங்குமெ ஒளி மங்கிடாமலே தங்கிடவேணும்
2. ஆழ்ந்த சேற்றினில் அமிழ்ந்த எம்மையே அணைத்து எடுத்தோனே
ஆழிதனிலெம்பாவ மெறிந்த அன்னை உத்தமனே
அன்றும் இன்றும் என்றும் துதிப்பேன் மன்னவனையே மனதினிலே
3. பாவம் போக்கியே கோபம் மாற்றிய ரோகம் தொலைத்தோனே
துரோகி என்னையே சுத்திகரித்த தூய வேந்தனே
தூயாநேயா காயமாற்றிய கருணாநிதியே பரிகாரியே
4. பாரிலென்னையே பிரித்தெடுத்தோனே தாவிவந்தோனே
அகமதினிலே ஆவி ஈந்திட அருள் நிறைந்தவனே
தரிசனம் தந்த தேவனே பரிசுத்தமாய் பாரில் ஜீவிக்க
5. பூரணர் ஆகவே பூவில் வாழ்ந்திட கிருபை அளித்தோனே
புகழை விரும்பேன் மகிழ்வேன் தினமே மகிமை செலுத்திடுவேன்
கோனே தேனே கோதில்லாதோனே கானம் பாடியே துதித்திடுவேன்