poorattam niraintha ulagaththiley போராட்டம் நிறைந்த உலகத்திலே
போராட்டம் நிறைந்த உலகத்திலே
பெற்றுக் கொள்ளத்தக்கதாய்
நாம் ஓடுவோம்
1.ஓடுபவர் எல்லாம் ஓடுவர்
ஒருவனே பெறுவான் பந்தயப் பொருளை
2.நிச்சயமில்லாது ஓடாமல் நாம்
முழு நிச்சயமாய் ஓடிடுவோம்
3.அழிவுள்ள கிரீடத்திற்காய் அல்ல
அழியாத கிரீடம் பெற ஓடிடுவோம்
4.அடைந்தாயிற்றென்று எண்ணாமல் – நாம்
இலக்கைநோக்கி தொடர்ந்திடுவோம்
5.நீதியின் கிரீடத்தைப் பெறவே நாம்
விசுவாசத்தைக் காத்துக்கொள்வோம்
6.முன்னோடியானவர் இயேசுவின்பின்
மகிமை நோக்கி ஓடிடுவோம்
7.பாரமான பாவங்கள் எல்லாம்
தள்ளிவிட்டே நாம் ஓடிடுவோம்
8.பரிசுத்தர்களுக்கென்று ஒப்புக்கொடுத்த
விசுவாசத்திற்காய் நாம் போராடுவோம்