saththiya thaevanin puurana vaazhvai பூரணவாழ்வு தாரும்
பூரணவாழ்வு தாரும்
சத்திய தேவனின் பூரண வாழ்வை
அனுபவமாய் நான் பெறவேண்டும் – 2
1. தேவனே என்னை போதித்து நடத்தும்
தோல்வி வராமல் தாங்கியே நிறுத்தும்
உத்தம பக்தர்கள் சூழ்ந்து நிற்க
இயேசுவை நோக்கித் தொடர உதவும் – 2
2. துன்பங்கள் தொடர்ந்து வந்திட்ட போதும்
துணிந்து நின்ற யோபுவைப்போல
அனைத்து வளமும் அகன்று போனாலும்
ஆபகூக் போல மகிழ்வேன் என்றும் – 2
3. கொண்டது அனைத்தையும் குப்பையாய்க் கண்ட
இலட்சிய வீரர் பவுலினைப் போல
இறுதிநாள் வரை உண்மையாயிருந்து
அழியா மகுடம் முடிவாய்ப் பெறுவேன் – 2