siluvaiyinadiyil sindhina rathathil சிலுவையினடியில் சிந்தின இரத்தத்தில்
சிலுவையினடியில் சிந்தின இரத்தத்தில்
மூழ்கிட வந்தேனையா (2)
உன் தூய இரத்ததால்
என்னையும் கழுவி பரிசுத்தமாக்கும் ஐய்யா (2)
1. சிந்தையின் பாவங்கள் போக்கிட
சிரசினில் முல்முடி அறைந்தனரோ (2)
முட்களால் சிந்தின இரத்தத்தாலே (2)
சிந்தையை பரிசுத்தம் ஆக்கிடுமே (2)
சிலுவையினடியில் சிந்தின இரத்தத்தில்
மூழ்கிட வந்தேனையா
2. திருக்குள்ள இதயத்தைக் கழுவிட
ஈட்டியால் இதயத்தைப் பிளந்தனரோ (2)
மாசில்லா உம் திரு இரத்தத்தாலே (2)
கேடுள்ள இருதயம் கழுவிடுமே (2)
சிலுவையினடியில் சிந்தின இரத்தத்தில்
மூழ்கிட வந்தேனையா
3. கொல்கதா மேட்டினில் பாய்ந்திடும்
இரத்தத்தில் மூழ்கிட வந்தேனைய்யா (2)
பரிசுத்த வாழ்வினைத் தந்திடுமே (2)
உன் தூய இரத்தத்தால் மூடுமைய்யா (2)
சிலுவையினடியில் சிந்தின இரத்தத்தில்
மூழ்கிட வந்தேனையா