sthiraththanmai enrum namakku ஸ்திரத்தன்மை
ஸ்திரத்தன்மை
ஸ்திரத்தன்மை என்றும் நமக்கு வேண்டும்
கிறிஸ்துவுக்குள் நிலைத்திருந்து வாழ வேண்டும்
சுய சித்தம் வெறுத்த சுய ராஜியம் அழித்து
அவர் அன்பில் நாம் என்றும் நிலைக்க வேண்டும்
1. பாவத்தில் வெற்றி நமக்கு வேண்டும்
வேதத்தில் வேர் ஊன்ற வேண்டும்
ஆவியின் கனிவரம் அலங்கரிக்க
பரிசுத்தாவி ஆளவேண்டும்
2. ஜெபமே மூச்சாய் மாறவேண்டும்
ஜெயம் ஜெயம் என்றே முழங்கவேண்டும்
பாமரர், பழங்குடி, உயர்குலத்தோர்
பரலோகம் சேர உழைக்க வேண்டும்
3.தரிசனப்பிரியர் எழும்பவேண்டும்
கிறிஸ்துவை என்றும் உயர்த்தவேண்டும்
நவபாரதம் புது எருசலேமை
அமைத்திடும் சிற்பியாகவேண்டும்